ஞாயிறு, ஜூன் 27, 2010

சதுரமென்று ஒரு வட்டம்..!

*
மூலைக்கு ஒன்று என
அறைந்து வைக்கிறாய்
ஒவ்வொரு வார்த்தைகளையும்

ஒரு சட்டகத்துக்குள்
குறுகவேண்டிய
நம் இரவின் ஈர உரையாடல்

விடியும் தருணத்தில்
சுழலத் தொடங்குகிறது
மையமிட்டு குத்தி நிற்கும்
பார்வையின் ஆழத்தில்

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக