ஞாயிறு, ஜூன் 27, 2010

மெட்ரோ கவிதைகள் - 72

*
பள்ளிக்கூட
நுழைவாயிலில் நின்றபடி
கண்ணீர் மல்க..

சொல்லுவதற்கோ
வேண்டுகோள் வைக்கவோ
வார்த்தைகள் இருந்தும்..

உதடு மடித்து
அழுகையைக் கட்டுப்படுத்தி..

கையசைத்து
' டாட்டா ' சொல்லி..

மெதுவாய் திரும்பி நடக்கிறான்
மகன்..

எனக்கும்
அவனுக்குமான விடுமுறையை
விழுங்கி ஏப்பம் விட்டு..

வாய்ப் பிளந்து காத்திருக்கிறது
கல்வி என்னும்
துருப்பிடித்த கதவு..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக