*
பள்ளிக்கூட
நுழைவாயிலில் நின்றபடி
கண்ணீர் மல்க..
சொல்லுவதற்கோ
வேண்டுகோள் வைக்கவோ
வார்த்தைகள் இருந்தும்..
உதடு மடித்து
அழுகையைக் கட்டுப்படுத்தி..
கையசைத்து
' டாட்டா ' சொல்லி..
மெதுவாய் திரும்பி நடக்கிறான்
மகன்..
எனக்கும்
அவனுக்குமான விடுமுறையை
விழுங்கி ஏப்பம் விட்டு..
வாய்ப் பிளந்து காத்திருக்கிறது
கல்வி என்னும்
துருப்பிடித்த கதவு..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக