ஒரு முதல் பார்வையில்
சிக்கிவிடாமல்
கொஞ்சம் காலதாமதத்தோடு
வந்தடைகிறது என்னை
தனிமையின் அடுக்குகளை
புரட்டிக் கொண்டிருந்த
இருள் கவியும் மாலைப் பொழுதில்
வியர்வையின் மினுக்கலோடு
பூக்கிறது என்னிடம்
தட்டப்படும் கதவுக்கு வெளியே
யாருமற்ற ஏகாந்தத்தில்
ஒளிப்புள்ளியாய்
நின்று ஏங்கும் காதலுக்காய்
இறுகியப் படிமப் பாளமொன்று
உருகி வெளியேறுகிறது
என்
இதயத்தின் வெப்பத்தால்..
****
நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஜூன் - 24 - 2010 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக