திங்கள், ஜூன் 28, 2010

பதம் தப்பிக் கெட்டித்த நினைவின் கரடுகள்..

*
நீ
விலகுதல் குறித்த மௌனங்களை
உதடுகளின்
சிறு இடைவெளிக்குள்
விதைத்து வைத்திருக்கிறாய்

பதம் தப்பிய மனதின் புரள்தலில்
ஈரம் குழைந்துக் கெட்டித்த
நினைவின் கரடுகளை
உழுதுக் கொண்டிருக்கிறது
என்
படிமக் குளம்புகள்

மூச்சு விடைத்து இழுக்கும்
தசையசைவுகளில்
நுரைத் தள்ளுகிறது
கடந்து செல்லும் நிமிடங்களும்
எதிர் கொள்ளும் நொடிகளும்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக