ஞாயிறு, ஜூன் 27, 2010

குரல்வளையிலிருந்து கிளம்பும் ஒற்றைக் கேவல் ஒலி..

*
அடர்ந்த இருளின் தனிமையில்
மிகக் கொஞ்சமான வெளிச்சத்தை
விரல்கள் தேடுகின்றன

எத்திசையிலிருந்தாவது
கதவுகள் திறக்க வேண்டும்

துர் கனவின் கூரையிலிருந்து
காரைப்பெயர்ந்து உதிர்கின்றன
விருப்பமற்ற காட்சிகள்

நிதானமின்றி நிறைவேற்றப்படும்
மரணக் கட்டளைகளை..
குரல்வளையிலிருந்து
வெடித்துக் கிளம்பும்

ஒற்றைக் கேவல் ஒலி..

நிராகரித்தபடி திறந்துவைக்கிறது..
புதிய கதவுகளை..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக