திங்கள், டிசம்பர் 27, 2010

சமவெளியெங்கும் சுவர்கள்..

*
கடவுளின்
வியர்வைத் துளி தான் சாத்தான்
என்ற
விவாத இரவுக்கு பின்

என் நாவில்
அவன் உப்பு கரிக்கிறான்

மனதில் முட்களாய் முளைக்கிறான்
கனவின் படுதாவை உதறிப் பிய்க்கிறான்

என்
சமவெளியெங்கும்
சுவர்கள் எழுப்பி
அதில் தன் எச்சில் கொண்டு
வர்ணம் பூசுகிறான்..

சாத்தான் இடையறாது உழைக்கிறான்

அவன் உடலில்
பெருகும் வியர்வைத்துளியில்
கடவுள் மின்னும்போது..

வானம் இடிய சிரிக்கிறான்..

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ டிசம்பர் - 14 - 2010 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11923&Itemid=139


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக