*
ஒவ்வொரு சந்திப்புக்குப் பிறகும்
ஒன்றிரண்டு
நம்பிக்கைத் தளிர்களின் நிறம்
பழுக்கத் தொடங்குவதோடு
அவை..
உதிரும் சந்தர்ப்பங்களுக்கான
நுனி கருகுதலை
ஆதார நரம்புவரை பரப்பிய பின்..
கழன்று கொள்கிறது..
யாதொரு
பிரயத்தனமும் அவசியப்படாமல்..!
****
நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ டிசம்பர் - 16 - 2010 ]
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11963&Itemid=139
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக