திங்கள், டிசம்பர் 27, 2010

மௌனத் துணையாக சுழலும் மின்விசிறி இழை..

*
ஊசி முனையென
பெய்யும் இப்பனி இரவில்
உன்
நினைவில் மருக மருக..
விம்முகிறது இதயம்

சுரக்காமல்
மார்க் கட்டிக் கொள்கிறது
காமம்

ஜன்னல் வழி
மென்காற்றுப் பட்டு
மௌனத் துணையாக
சுழல்கிற
மின்விசிறி இழைப் போல்
அசைகிறது

உன் மீதான காதல்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக