செவ்வாய், டிசம்பர் 28, 2010

மெத்தென்று உதைப்படும் பூமி

*
இதழ் குழிய சிரிக்கிறாய்
அரிசிப் பல் முளைக்கும் முன்
மொழியைக் குழைக்கிறாய்
பால் எச்சிலில்

தத்தக்கா பித்தக்காவென்று
உதைப்படும் கால்களால்
மெத்தென்றாகிறது
கொஞ்சம் பூமி

பெயர் சொல்லியழைத்ததும்
சட்டென்று திரும்பிப்
புன்னகைக்கிறாய்

பெயர் சொன்னதால் மட்டும் தானா...!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக