*
இதழ் குழிய சிரிக்கிறாய்
அரிசிப் பல் முளைக்கும் முன்
மொழியைக் குழைக்கிறாய்
பால் எச்சிலில்
தத்தக்கா பித்தக்காவென்று
உதைப்படும் கால்களால்
மெத்தென்றாகிறது
கொஞ்சம் பூமி
பெயர் சொல்லியழைத்ததும்
சட்டென்று திரும்பிப்
புன்னகைக்கிறாய்
பெயர் சொன்னதால் மட்டும் தானா...!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக