*
வழித் தவறிய
கவிதைக் காட்டின்
அடர்ந்த இருளில்
பேனாவைக் கடத்திப் போகின்றன
மின்மினிப் பூச்சிகள்
சிறிது வெளிச்சம் போர்த்திய
மங்கிய வளைவொன்றில்
எதிர்ப்பட்ட
உயரமான மரமொன்றின்
கிளைகள் தோறும்
பூத்துத் தொங்குகிறது
இதுவரை எழுதப்படாத
கவிதைகள்
யாவும்
****
உங்களின் கவிதைகளை படித்தமாத்திரத்தில் தோன்றும் ஒரே உணர்வு "ஆஹா!!!" மட்டுமே! வேறு வார்த்தைகளே எனக்கு கிடைப்பதில்லை...
பதிலளிநீக்குநன்றி..!
பதிலளிநீக்குஜெயசீலன் :)