செவ்வாய், டிசம்பர் 28, 2010

எழுதப்படாத மின்மினிப் பூச்சிகள்..

*
வழித் தவறிய
கவிதைக் காட்டின்
அடர்ந்த இருளில்
பேனாவைக் கடத்திப் போகின்றன
மின்மினிப் பூச்சிகள்

சிறிது வெளிச்சம் போர்த்திய
மங்கிய வளைவொன்றில்
எதிர்ப்பட்ட
உயரமான மரமொன்றின்
கிளைகள் தோறும்
பூத்துத் தொங்குகிறது

இதுவரை எழுதப்படாத
கவிதைகள்
யாவும்

****

2 கருத்துகள்:

  1. உங்களின் கவிதைகளை படித்தமாத்திரத்தில் தோன்றும் ஒரே உணர்வு "ஆஹா!!!" மட்டுமே! வேறு வார்த்தைகளே எனக்கு கிடைப்பதில்லை...

    பதிலளிநீக்கு