*
காத்திருக்கச் சொல்லி
எழுந்து போகிறாய்
திரும்பி வர மறந்துவிடுவது
உன் வழக்கம்
ஆபீஸ் வரவேற்பறை ஸோபாவில் புதைந்தபடி
உன் சமீபத்திய
கவிதைத் தொகுப்பைப் பிரித்து
முதல் கவிதையை வாசிக்கத் தொடங்குகிறேன்
காத்திருக்கும்படிச் சொல்லி
எழுந்து போகிறது
உன்
கவிதையும்
****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 6 - 2010 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3738
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக