*
ஒவ்வொரு வீட்டின் தனியறையிலும்
இரவின் வெப்பம் தணியாத
நிழல்
கொஞ்சம் மிச்சமிருக்கிறது
சொற்ப வசவு வார்த்தைகளின்
காயாத ஈரம்
ரகசியமாய்
எங்கோ ஒரு மூலையில் தேங்கிவிடுகிறது
மயிர்க் குப்பைகளை இழுத்தபடி
அலைமோதும் காற்றுக்கும்
தேவைப்படுகிறது
தனியறையில்
ஒரு
தனிமை இடம்
வதைகளின் குரல்கள்
படுக்கையில் கலைந்து கிடக்கும் போர்வையின்
மடிந்த நிழல்களில்
சுருங்கி உலர்ந்துக் கொண்டிருக்கிறது
பின்வரும் பகலின்
கண்ணீர்த் துளிகளை எண்ணி
*****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 20 - 2010 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3783
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக