*
இந்த தேனீர் விடுதியின்
காலி இருக்கைகள்
என்னோடு பேசிக் கொண்டிருந்தன
நீ
வரும் வரை
மேஜை மீது வட்டங்களாக
வரைந்துக் கொண்டிருந்த நீர்த் துளி
மின் விசிறிக் காற்றில்
விளிம்பு அதிரத் துடித்துக் கொண்டிருந்தது
புன்னகைக் குழைவோடு
தொடங்கிய நம் உரையாடல்
அந்தரத்தில் அறுபட்டு
நீ
வெளியேறிய வேகம்
கண்டு
இன்னும் நடுங்கிக் கொண்டிருக்கிறது
எதிர் நாற்காலி
****
நன்றி : 'திண்ணை' இணைய இதழ் ( டிசம்பர் - 19 - 2010 )
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31012191&format=html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக