திங்கள், டிசம்பர் 27, 2010

இரவிலிருந்து பகல்கள் தொடர்ந்து..

*
தேவதையின் கண்கள்
களைத்து விட்டது

பூப்பதற்குரிய நம்பிக்கையை
நிராகரிக்கச் செய்கிறது
இரவிலிருந்து இந்தப் பகல்கள் தொடர்ந்து
கூம்பியபடி சினந்து நிற்கும்
இரு மொட்டுக்கள்..

கன்னம் கிள்ளுதல் சாத்தியமில்லை
என்பதாக
உதடுகள் சுழித்துக் கொள்கிறது
புன்னகைக் கோடுகள்

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக