வியாழன், பிப்ரவரி 27, 2014

நடந்து கடந்த தருணங்களின் ஒற்றையடிப் பாதை..

*
ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறாய்
நேற்றைய சத்தியங்களை
நினைவுக் கூறும் வார்த்தைகளைப் பதட்டத்துடன்
உனது விரல்கள் நெசவு செய்கிறது

திட்டமிட்டு வைத்திருந்த கனவுகளின்
அத்தனை ஜன்னல்களையும் திறந்து விடுகிறாய்
தும்மலுறச் செய்யும் காட்சிகள் மொத்தமும்
புழுங்கிச் சுழல்கிறது
வெளியேறும் ப்ரியமில்லாமல்

நடந்து கடந்தத் தருணங்களின்
ஒற்றையடிப் பாதையில்
நீயுமற்று நானுமற்று
வெகு காலமாகக் காத்திருக்கிறது
கால் தடங்கள்

வரைபடம் கொண்டு வா
இன்னுமொரு பயணம் போவோம்

****
 நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே  - 14 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5598

1 கருத்து: