*
சதுரமெனவும்..
நீள் வட்டமெனவும்..
நேர்க்கோடு - நெளிக்கோடு எனவும்..
கனவின் கன்னத்தில்
நிழல் போல் மலர்கிறாய்..
உன் ரகசிய பாதைகளில்..
நிலவொன்று விழுந்து
பாதரசமாய் சிதறி உருளுகிறது..
வெளிச்சங்களை அள்ளி..
தாவணி முந்தானையில் மறைத்து..
என்னிடம் காட்டுகிறாய்..
அவை..
குட்டி குட்டி சிறகுகள் முளைத்து..
இறகென மிதந்து..
காட்டுக்குள் பறக்கின்றன..
ஆனால்..
சதுரமெனவும்..
நீள் வட்டமெனவும்..
நேர்க்கோடு - நெளிக்கோடு எனவும்
வரைபடமாகிறாய்..
தினமும்..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக