*
நேற்றிரவு குடித்த
மதுவை..
துப்பிவிட..
ஆட்காட்டி விரலைத்
தொண்டைக்குழிக்குள்.. இறக்கி..
ஒக்காலமிட்ட நொடியில்..
கையில்.. பிசுப்பிசுப்பாய்..
வந்து விழுந்தது
கவிதையொன்று..
உள்ளங்கையில்..ஏந்தியபடி..
நீர்நிலையைத்
தேடி அலைகிறேன்..
மனம்
முழுக்க..
பாலைவனத்தைக்
கொட்டி வைத்திருக்கும்..
உன்னைத் திட்டியபடி..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக