புதன், ஜூலை 01, 2009

நீர்நிலைப் பாலைவனம்..

*
நேற்றிரவு குடித்த
மதுவை..
துப்பிவிட..

ஆட்காட்டி விரலைத்
தொண்டைக்குழிக்குள்.. இறக்கி..

ஒக்காலமிட்ட நொடியில்..

கையில்.. பிசுப்பிசுப்பாய்..
வந்து விழுந்தது
கவிதையொன்று..

உள்ளங்கையில்..ஏந்தியபடி..
நீர்நிலையைத்
தேடி அலைகிறேன்..

மனம்
முழுக்க..
பாலைவனத்தைக்
கொட்டி வைத்திருக்கும்..
உன்னைத் திட்டியபடி..

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக