*
கீழ்மையின் கனம்
தாங்கவொண்ணா..
பதற்ற நீட்சியை..
செதில்கலென
நினைவிற் செருகி..
நிரந்தர
பகிர்வுக்கான இழைகளை
அறுபட..
நிர்பந்திக்கும் பொருட்டு..
மனசின்
புறவாசலில்..
மண்டும்
விஷக் கொடிப் புதர்களை..
வேரோடு பிடுங்கி..தீயிலிட்ட
சாம்பலின் மிச்சங்கள்..
வாயகற்றி கொட்டுகிறது..
தனிமையின் உந்துதலை..
புறக்கணிக்கும்..
வக்கற்ற
கற்பனாயுத வெளியொன்று..
இனத்தின் சுவடுகளை தூசுகளாய்..
காற்றில் கிளப்பி..
தாங்கவொண்ணா
பதற்ற நீட்சியின் கீழ்மையின் கனம்
யுக யுகமாய் அலைகிறது..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக