சனி, ஜூலை 04, 2009

நீ வரும் வரை..

*

சொல்வதாக சொன்னவை எல்லாம்..
சொல்லாதவைகளாகவும் படர்கின்றன..
நீர் பசலையாக..

மனப் படித்துறையில்..
அருகில்..
குவிந்து கிடக்கின்றன..
சிறு சிறு ஞாபகங்கள்..

அலை வளையங்கள்..
கரை நோக்கி விரியும் பொருட்டு..
ஒவ்வொன்றாய் வீசிக் கொண்டிருக்கிறேன்..
நீ வரும் வரை..

வெகு நேரம்..
யாரோடோ..
பேசிக் கொண்டே இருக்கிறது..
தன்
கீழ்த்தாடையின் உப்பலில்..
செய்தி சேகரித்து வைத்திருக்கும்..
ஒரு தவளை..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக