*
சூடாக ஒரு கோப்பைத் தேனீரோடு..
டீ - கடையில் நிற்கும்போது..
சொற்கள் மழையாக பொழிகின்றன..
எரியும் சிகரெட்டை..
உதட்டில் பொருத்தி. .
கடற்கரையில்..நின்றபடி..
ஆழமாக இழுத்தால்..
சொற்கள் புகையாக..
நுரையீரல் முழுதும் நிரம்புகிறது..
கால் நனைக்கும் அலையொன்று..
தொட்டு மீளும்போது..
சொற்கள்..நுரையாக உடைகின்றன..
துள்ளத் துடிக்க..
தொடுவானின் விளிம்பை..
முத்தமிடும்..
ஒரு மீனின்..
இதழ்களில்..
சொற்கள் பூசிக்கிடக்கின்றன..
நிலவின் மினுமினுப்பை..
சாலையேறி..
கடப்பதற்கு.. காத்திருக்கும் நிமிடத்தில்..
சொற்களை..
அரைத்தபடி எங்கோ விரைகின்றன..
கணக்கில்லா வாகனங்கள்..!
****
நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) ஆகஸ்ட் - 2009
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1807
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக