*
நறுவிசாய்
மௌனம் பூசிக்கொள்ளும்
தனிமையின்
வேர் நுனியில்..
முடிச்சிட்டுக் கிடக்கிறது
சிறு சப்தம்..
உறைந்துவிட்ட
நினைவுகளை உருக்கிட..
அனல் வீசிக் கடக்கும்
ஒருத்தியின் புன்னகையால்..
பொங்கும்
கண்ணீர்த் துளிகளை..
புணரும்
வேர் நுனிகள்..
இளக்குகின்றன..
முடிச்சுகளை..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக