புதன், ஜூலை 29, 2009

புணரும் வேர் நுனிகள்..

*

நறுவிசாய்
மௌனம் பூசிக்கொள்ளும்
தனிமையின்
வேர் நுனியில்..

முடிச்சிட்டுக் கிடக்கிறது
சிறு சப்தம்..

உறைந்துவிட்ட
நினைவுகளை உருக்கிட..

அனல் வீசிக் கடக்கும்
ஒருத்தியின் புன்னகையால்..

பொங்கும்
கண்ணீர்த் துளிகளை..
புணரும்
வேர் நுனிகள்..

இளக்குகின்றன..
முடிச்சுகளை..

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக