புதன், ஜூலை 29, 2009

மழைச் சித்திரங்கள்..

*

செருப்பின்
ஓரத் தையல்களில்..
நைந்து..

பிசிராய் கிளம்பிய
நூல் நுனிகள்..

நேற்றிரவு..
வீடு திரும்புகையில்..
மழையில்..
தெருவில்..
நனைந்த சுகத்தில்..

வாசலோரச் சுவரில்..
வரைந்து வைத்திருக்கின்றன..
தான்..
ப்ரியப்பட்ட
கோட்டுச் சித்திரங்களை..!

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக