சனி, ஜூலை 04, 2009

பெருந்துயரப் பாடல் ஒன்று..

*

மந்திரக் கிழவன் ஒருவனின்..
மாயக் கரங்களில்..ஒரு கூடு இருந்தது..

பெயர் தெரியா..
பறவையொன்று இட்டு வைத்த..
முட்டைக்குள்.. வளருகிறது..
பெருந்துயரப் பாடல் ஒன்று..

யுகங்கள் கடந்த பருவ நிலைகளில்..
வெப்பம் உறையும்.. குளிர் இரவுகளாய்...
கிழவன் உறங்குகிறான்..

அவன் மூச்சுக் காற்றில்..
பனி பொழிகிறது.. எப்போதும்..

கூட்டைத் தேடி..
கோடைப் பாலைவெளியெங்கும்.. பறக்கிறது..
எனக்கும்....பாடலுக்குமான..
சிறகுகள்...

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக