சனி, ஜூலை 04, 2009

கரையென புதைந்த சொற்கள்...

*

புனைவின் வெளி..
கரைகளற்று விரிந்து கிடக்கிறது..

கழுகுகள்..
வட்டமிட்டபடியே இருக்கின்றன..
நான்.. கடக்கவிருக்கும் பொழுதுக்காக..

தீர்மான கிரணங்கள் பட்டு..
கண் கூசினாலும்..
சில அடிகள் நகர்ந்தேன்..

ஊன்றும் எழுதுகோல்.. முனை புதைகிறது..

அதன்.. கூர்மை மழுங்கலிலிருந்து..
சொட்டுகளாய் திரளும் வார்த்தைகள்..
கோர்த்துக்கொண்டு ஒழுகுகின்றன..
வாக்கியங்களாக..

வானிலிருந்து..
கழுகின் ஒற்றை இறகு..
உதிர்ந்த வேகத்தில்..அசைந்து..அசைந்து..
என் வெளியைத் தொட்டபோது..

நான்..
புனைவின் கரையென..
உறைந்துவிட்டேன்..

வேர்விட்டுப் படர்ந்தபடியிருக்கிறது...
மிக நீண்ட..
கவிதையொன்று..!

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக