புதன், ஜூலை 29, 2009

நான் அறையில்...இல்லாத சமயத்தில்..

*

கண்ணாடி அலமாரிக்குள்
கால வரிசைப் பிறழ்ந்து
முதுகு காட்டி..
நிற்கும்
டைரிகளுககுள்..

எழுதாத பக்கங்களுக்கும்..
எழுதிய பக்கங்களுக்குமான
நீண்ட உரையாடல்களை..

பக்கத்து குடுவையில்
செருகிக் கிடக்கும்..
என்
பேனாக்கள்..
குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றன..

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக