*
கனவின் பக்கங்களை
ஓசையின்றிக் கிழிக்கின்றன
இரவுகள்..
தென்றலை நூல் கோர்த்து..
குளிர் ஊசிகளை
இறக்குகின்றன..
காட்சிகளின் மீது..
சூரியன்
தன் நூலகத்தின்
கதவுகளைத் திறந்து வைக்கும்போது..
வெளிச்சம் படராத..
அதன்
உள்ளறை அலமாரிகளில்..
வரிசைக் குலைந்து
அடுக்கப்பட்டிருக்கின்றன..
இதுவரை..
பூமியில் -
பிறந்து மரித்தவரின்..
கனவு புத்தகங்கள்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக