*
கண்கள் சொக்கிய
நடு ஜாமத்தில்..
கவிதை தன் கதவுகளை மூடிக்கொண்டது..
நிலவின் எச்சிலாக ஒழுகிய இரவை..
நடுநிசி நாய்கள்..
நக்கியபடி ஊளையிடுகின்றன..
தெருமுனை
அரசமரத்தின் இலைகளெல்லாம்..
ஒரு சேர..
காற்றில் அசைந்து..
தெருவிளக்கொளிப்பட்ட
நிழல்கள்..
ஆட்சேபம் எழுதின..
வீடுகளின் பக்கச் சுவர்களில்..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக