புதன், ஜூலை 08, 2009

நடுநிசி வீடுகளின் பக்கச் சுவர்கள்..

*

கண்கள் சொக்கிய
நடு ஜாமத்தில்..
கவிதை தன் கதவுகளை மூடிக்கொண்டது..

நிலவின் எச்சிலாக ஒழுகிய இரவை..
நடுநிசி நாய்கள்..
நக்கியபடி ஊளையிடுகின்றன..

தெருமுனை
அரசமரத்தின் இலைகளெல்லாம்..
ஒரு சேர..
காற்றில் அசைந்து..

தெருவிளக்கொளிப்பட்ட
நிழல்கள்..

ஆட்சேபம் எழுதின..
வீடுகளின் பக்கச் சுவர்களில்..

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக