சனி, ஜூலை 04, 2009

வார்த்தைகளுக்குள் இருக்கும் முனகல்..

*

மரணம் பற்றி..
சிறு குறிப்பொன்று..
எழுதிக் கொண்டிருந்த இரவில்..

வழித் தப்பிய தும்பியொன்று..

என் அறையின்..
மின் குழல் விளக்கை..
சுற்றத் தொடங்கியது..

இறகின் ரீங்கரிப்பில்..
எழுதிக் கொண்டிருந்த ..
மரணக் குறிப்புகள்..நடுங்கின..

வார்த்தைகளுக்குள்ளிருந்து..
சிறு முனகலொன்றும்..மெல்ல கசிந்தது..

விளக்கின் மறைவிலிருந்து..
நழுவி வெளிப்பட்ட..
பல்லியொன்று..

வேகமாய் முன்னகர்ந்து..
சட்டென்று..நின்றது..

அசைவற்ற கணங்கள்...
முறையே மூன்று..

1. என் பேனாவின்.. நின்றுவிட்ட இயக்கம்..
2. தும்பியின்.. ரீங்கரிப்பற்ற பேரமைதி..
3. சாம்பல் நிறக் கண்கள்..குத்திட்ட..பல்லியின் பார்வை..

நீண்டிழுத்துக்கொண்ட
நாவின் நுனியில்..
தும்பியின் துடிப்பாக..
வால் மட்டுமே.. எஞ்சிற்று..

மரணக் குறிப்பில்..
மாமிச வாசனை..
கொஞ்சங்கொஞ்சமாய்.. வீசத் தொடங்கிய..
இரவில்..

பல்லிகள் உறங்கவில்லை..

*****


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக