சனி, ஜூலை 04, 2009

இன்னொரு கதவு..

*

எழுதிக் கொண்டிருந்த
கவிதையிலிருந்து..
ரத்தம் சொட்ட..வெளியேறினான்..
பகைவன்..

விசாரணைக்காக..
போலிஸ்
என்னைத் தேடி வந்தபோது..

இன்னொரு கவிதைக்குள்ளிருந்து..
கதவு திறந்து விட்டாள்..காதலி..
ஒளிந்து கொள்ளும்படி..!

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக