*
அறையில்
இறுகி கெட்டித்திருக்கும்
இருளின் அடர்த்தியில்..
சிறு வீக்கமாய்
புடைத்திருக்கும்
சுவர் குண்டு விளக்கில்..
வழியும்
ஒளிக் குருதியை
பருகும் தாகத்தோடு..
சுழலும் ஈசலின்..
பார்வை..
பதிவு செய்கிறது..
உதிரும் தன் சிறகை..
பின்..
யாதொன்றும் செய்யவியலா..
கையறு நிலையென..
தரையில் ஊர்ந்து..
மௌனமாய்..
அறையை விட்டகலும்..
என்னிடம்...
சொல்லிக்கொள்ள மறந்தபடி..!
****
நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) ஜூலை - 2009
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1712
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக