*
இருவருக்குமான
இடைப்பட்ட
நிமிடங்களின் இடைவெளியில்..
மௌனமொன்று..
உறுமுகிறது..
பின்னிரவின்
தெருவிளக்கு உமிழும்
மங்கிய
மஞ்சள் நிற ஒளியின்..
நிழலுக்குள்..
கவனிப்பற்று
சேகரமாகிறது..
சலிப்பு மிகு பகமைக்கான
முகாந்திரம்..
முஷ்டியின்
பலம் முறுகும்..
தசை நார்களில்..
எப்போதும்
தொடுக்க முடிந்ததில்லை..
சமாதானத்துக்கான பூக்களை..!
*****
அபாரமான கவிதை. உங்கள் கவிதையை பிடித்த கவிதையாக என் தளத்தில் இடலாமா?
பதிலளிநீக்குநான் தொடுத்து நிற்கிறேன் வாழ்த்து பூக்களை....
பதிலளிநீக்குஇந்த கவிதைக்காரனின் காலடியில் சேர்க்க.....