வெள்ளி, ஜூலை 31, 2009

பகைமைக்கான முகாந்திரம்..

*

இருவருக்குமான
இடைப்பட்ட
நிமிடங்களின் இடைவெளியில்..

மௌனமொன்று..
உறுமுகிறது..

பின்னிரவின்
தெருவிளக்கு உமிழும்
மங்கிய
மஞ்சள் நிற ஒளியின்..
நிழலுக்குள்..

கவனிப்பற்று
சேகரமாகிறது..
சலிப்பு மிகு பகமைக்கான
முகாந்திரம்..

முஷ்டியின்
பலம் முறுகும்..
தசை நார்களில்..

எப்போதும்
தொடுக்க முடிந்ததில்லை..

சமாதானத்துக்கான பூக்களை..!

*****

2 கருத்துகள்:

  1. அபாரமான கவிதை. உங்கள் கவிதையை பிடித்த கவிதையாக என் தளத்தில் இடலாமா?

    பதிலளிநீக்கு
  2. நான் தொடுத்து நிற்கிறேன் வாழ்த்து பூக்களை....
    இந்த கவிதைக்காரனின் காலடியில் சேர்க்க.....

    பதிலளிநீக்கு