*
அகாலத்தில்
கதவு தட்டுகின்றன..
பாதி படித்து
கவிழ்த்து வைத்த
புத்தகத்தின்
கதாபாத்திரங்கள்..
'தூக்கம் தொலைத்த
இரவும்..
தொலைந்து விட்டதாக..'
சண்டைக்கு வருகின்றன..
அடுத்தப் பக்கத்துக்கான..
திசையை..
நச்சரிப்புடன் விசாரிக்கின்றன..
'என்னங்க..?' - என்றாள்
தூக்கக் கலக்கத்தில்..மனைவி..
'படு..! காலைல எழுப்பறேன்..' -
என்றபடி..
படுக்கையறை கடந்து..
படிக்கும் மேஜையில்..
கவிழ்ந்து கிடந்த புத்தகத்தை..
கையிலெடுத்து..
விட்ட இடத்திலிருந்து...
வாசிக்கத் தொடங்கினேன்..
தொலைந்த இரவும்..
அடுத்தப் பக்கத்துக்கான
திசையும்..
அறை ஜன்னலின்
இடுக்கினூடே..
மெல்ல நுழைகிறது..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக