புதன், ஜூலை 08, 2009

மௌனத்தை உடுத்திக்கொண்டு..

*

ஒரு
நண்பகலில்..
மௌனத்தை..உடுத்திக்கொண்டு..
தெரு இறங்கினேன்..

எதிர்ப்பட்டவர்கள்..
சொன்னார்கள்..

அழகாக இருப்பதாக..
நல்ல உடுப்பென்றும்..

மன நெரிசலுக்கு அடர்த்தியாக..
சொகுசாக இருக்கும் போலும்..

எனும்படி..

அபிப்பிராயங்களை...
என் பாக்கட்டில்..செருகி சென்றார்கள்..

மிடுக்கில்..நெஞ்சு
நிமிர்ந்த..நொடியில்..

பின்னிருந்து..
என்னைக் கடந்து சென்ற ஒருவன்..
என் தோளைத் தட்டி சொல்லிச் சென்றான்..

என் மௌனம்...
முதுகு பக்கம் கிழிந்திருப்பதாக...

****

நன்றி : ( உயிரோசை/உயிர்மை.காம் ) ஜூலை - 2009
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1740

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக