*
திசை காட்டியை..
தொலைத்து விட்டதாக..
கானகத்திடம் முறையிட்டேன்..
ஆதி மரமொன்று..
கிளைகள் அசைத்து..
மெல்ல சிரித்தது..
அதன்
விழுதுகளை..
இறுகப் பற்றியிருந்த நிலத்தில்..
எறும்புகள்..
எனக்கு முன்னே...
ஊர்ந்து கொண்டிருந்தன..
அதை..
பின்தொடர்ந்து..
நகரத்தை கண்டு பிடித்தேன்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக