திங்கள், ஆகஸ்ட் 31, 2009

மெட்ரோ கவிதைகள் - 26

*
பஸ் ஸ்டாப்புகளில்..
ரயிலடிகளில்..
தியேட்டர் வாசல்களில்..
ஸ்வீட் ஸ்டால் ஓரங்களில்..

கையேந்தும் குழந்தைகளின்
கண்களில்..

சாம்பல் பூத்துத் தோன்றும்
வானத்தை..
அழுக்காய் கடக்கும்
மேகங்கள்..

கண்ணீர்த்துளிகளை
முட்டி நகர்ந்துவிடுகிறது..

எப்போதும் போல்
இப்போதும்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக