திங்கள், ஆகஸ்ட் 31, 2009

மெட்ரோ கவிதைகள் - 31

*
நெருக்கடி..
சூழல்...மிதக்கும்..
நிமிடங்களை..
காகிதக் காற்றாடியின்..
சுழற்ச்சியோடு...
பினைத்துவிடத் துடிக்கிறான்...

குழந்தைகளுக்கான்...
பொம்மைக் காற்றாடிகள்..
விற்கும்..சிறுவன்..

மனித
கசகசப்புகளுக்கு...நடுவே...

ரங்கநாதன் தெரு..
பிழிந்து போடும்...
பசியின்...அகவல்களை..

அவனின்..விரல் நுனிகள்...
முன்னைக் காட்டிலும்..
வேகமாக...
சேகரிக்கின்றன...

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக