*
முகங் கொள்ளாத் தயக்கங்களோடு..
உன்..
வாசலில் நின்ற தருணத்தை..
' பட் ' டென்று..
ஒரு கதவைப் போல்
அறைந்து சார்த்தினாய்..
முடிவில்லா
என்
பகலை மடித்து..
உன் அயர்ச்சியைத் துடைக்கவே..
பிரியமாய் பயணிக்க நேர்ந்தது..
காலங்களை..
' கவன் ' களில் பொருத்தி
குறி பார்க்கும்
வாழ்வின் வேட்டையில்..
பலியாகிப் போகிறது
ஒவ்வொரு முறையும்
மனசு..!
****
நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) நவம்பர் - 2009
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2244
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக