திங்கள், ஆகஸ்ட் 31, 2009

வாழ்வின் வேட்டை..

*

முகங் கொள்ளாத் தயக்கங்களோடு..
உன்..
வாசலில் நின்ற தருணத்தை..
' பட் ' டென்று..
ஒரு கதவைப் போல்
அறைந்து சார்த்தினாய்..

முடிவில்லா
என்
பகலை மடித்து..

உன் அயர்ச்சியைத் துடைக்கவே..
பிரியமாய் பயணிக்க நேர்ந்தது..

காலங்களை..
' கவன் ' களில் பொருத்தி
குறி பார்க்கும்
வாழ்வின் வேட்டையில்..

பலியாகிப் போகிறது
ஒவ்வொரு முறையும்
மனசு..!

****

நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) நவம்பர் - 2009

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2244

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக