திங்கள், ஆகஸ்ட் 31, 2009

நெம்புக் கோல்...

*

ஆலாய்
பறந்து விடுவதற்கான
முனைப்புகளோடு..
சிறகுகள் முளைக்கப் பணித்தேன்..
சொற்களுக்கு..

ரீங்கரிப்பு உதறலோடு
காதருகே.. அடம்பிடித்தன
வட்டமிட்டபடியே..

துரத்துவதற்கான
வாக்கியத்தைத்
தேடத் தொடங்கியபோது..

எங்கள்
வாதத்தைப் புரட்டிப் போட..
கையிலொரு
நெம்புக் கோலோடு..
வந்து சேர்ந்தான்..
மற்றுமோர் நண்பன்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக