*
முன்னெப்போதும்
அறிந்திராத
புன்னகையொன்றை..
ரகசியமாய்
தோட்டத்து கிணற்றுக்கு பின்புறம்
வளர்த்து வருகிறாள்..
பார்வை வண்டுகளின்
இமை ரீங்கரிப்பில்..
அவளின்
வாசலைக் கடக்கும்
தருணங்களிலெல்லாம்..
நுகர முடிகிறது
ஒரு மகரந்தத்தை..
உகுக்கும்
தேன் துளிகளை..
பெருக்கிடும்
ஊற்றுச் சுழியை..
பத்திரமாய்
கன்னத்தில் வைத்திருக்கிறாள்..
வில் வடிவ உதடுகளில்..
பொன்மாலை வெயிலொன்று..
பூசி நகர்கிறது..
காதலுக்கான
முதல் சரிகையை..
என்
சைக்கிள் மணியின்..
ஒலியை.. சேகரித்து..
தலையசைக்கிறது..
எப்போதும்..
அந்த தங்க ஜிமிக்கி...
****
அழகான ஜரிகை!
பதிலளிநீக்கு