திங்கள், ஆகஸ்ட் 31, 2009

என் இரவின் அகாலம்..!

*

நேர்முகக் கணக்குகள்..
ஏதும்.. அற்ற..
பிரியங்களை..

சின்ன சின்ன
அறைகளாக செதுக்கி...
கவிதை மாளிகைக்குள்
பொருத்திவிடத் துடிக்கும்..

என் இரவின்..
அகாலத்தை..

பஞ்சு மேகங்கள் அனுப்பி..
மழைப் பொழிய முனைகிறாள்..

இழுத்துப் போர்த்திக் கொள்ளும்..
பாவனையில்..
ஜன்னல் திரைச்சீலைகள்...
காற்றை வடிக்கட்டி..

மேஜையின்..
தெற்கு மூலையில்...
குவித்து வைத்துவிட்டு..
அமைதியாக காத்திருக்கிறது..

நான் எழுந்து...
அகலும்...தருணத்துக்காக..!

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக