*
கடித த்வனியில்..
வெளிர் மஞ்சள் நிற..
மழையின் சாரலை..
விரல்கள்..
சில்லிட்டு உணர்ந்துக் கொண்டன..
வைக்கோல்...போரின்..
வெப்பச் செதில்களை..
வரப்பின்..நுண்ணிய ஈர நுனிகளை...
கம்மாய்க் கரையை..
மென்மையாய் மோதித் திரும்பும்..
அலையின்..சிரிப்பை..
எளிய..
வார்த்தைக் கொண்டு...
நட்பை வனைந்திருந்தான்..
பால்ய நண்பன்..
என்
அறைக்குள்...
கதவு திறந்து...
மேஜை மீது வைக்கப்பட்ட..
'பிசாவின்'
ஆவி பறக்கும்...
வெம்மையை...
ஏசியின்...ரீங்காரம்...
மெல்ல விழுங்கத் தொடங்குகிறது..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக