*
பின்னிரவில்..
மங்கிய சோடியம் வேப்பர்
விளக்கொளி பூசிய
சாலையில்..
தொய்வான நடையில்
வீடு திரும்பும்
தருணங்களில்..
எப்போதாவது..
கேட்டு விட நேர்கிறது..
ஒதுக்குப் புறமாய்
நிற்கும்.. காருக்கடியிலிருந்தோ..
இருள்படிந்த
குப்பைத் தொட்டிகளின்
மறைவிலிருந்தோ..
இடைவிடாத...
அழைப்போடு ஏங்கும்..
பூனைக்குட்டியின் குரலை..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக