திங்கள், ஆகஸ்ட் 31, 2009

மெட்ரோ கவிதைகள் - 27

*
பின்னிரவில்..
மங்கிய சோடியம் வேப்பர்
விளக்கொளி பூசிய
சாலையில்..

தொய்வான நடையில்
வீடு திரும்பும்
தருணங்களில்..

எப்போதாவது..
கேட்டு விட நேர்கிறது..

ஒதுக்குப் புறமாய்
நிற்கும்.. காருக்கடியிலிருந்தோ..

இருள்படிந்த
குப்பைத் தொட்டிகளின்
மறைவிலிருந்தோ..

இடைவிடாத...
அழைப்போடு ஏங்கும்..
பூனைக்குட்டியின் குரலை..!

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக