திங்கள், ஆகஸ்ட் 31, 2009

தவளையின்..இரவு பாடல்..

*

மின்மினிப் பூச்சிகளை
கண் சிமிட்டி
அழைக்கின்றன..
இரவு நெடுக
விண்மீன்கள்..

கறுத்து மிதக்கும் குளத்தின்
தாமரை இலை மீதமர்ந்து..

அடித்தொண்டை புடைக்க..
' கொர்ரக்.. கொர்ரக்..' - என்று..
புகார் சொல்லிக்கொண்டே..
இருக்கிறது..

ஒரு தவளை..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக