வெள்ளி, ஜூலை 30, 2010

மெட்ரோ கவிதைகள் - 76

*
எதிர்மாடிக் கட்டிடட வேலைக்கு
கொட்டி வைத்திருக்கும்
பக்கத்து மணல் ஒதுக்கை நோக்கி..

எங்கிருந்தோ
வெவ்வேறு திசையிலிருந்து
கிளம்பி வருகின்றன பின்னிரவில்..
இரண்டு பசுக்கள்..

சிநேக அசைப் போடுதலில்
உருகி ஓடுகிறது
மஞ்சள் நிற சோடிய விளக்கொளி

விடியலில் சுரக்கும் பால்
டீக்கடை எவர்சில்வர் பாத்திரத்தில்
கொதித்து ஆவியாவதில்..
வெண்ணிறமாய்
சுழன்றெழும் பெருமூச்சுக்கள்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக