*
சாய்வுக் கோணத்தில்
எடுக்கப்பட்ட புகைப்படத்தில்
உன் புன்னகை வளைந்திருக்கிறது..
ஒளியும் இருளும் ஊர்ந்து வந்து
உன்னை அடைந்ததாகவே
தீர்மானிக்கத் தூண்டுகிறது
கண்ணசைத்துவிடாமல் நிற்க நேர்ந்த
அந்தவொரு நொடியில்
உன் கண்களில்...
எல்லைக் கோடமைத்த கண்ணீருக்கு
யாதொரு அர்த்தமும் இல்லை தானே..!
****
kandippa illaiyinga...
பதிலளிநீக்கு