வெள்ளி, ஜூலை 30, 2010

மரணத்தின் ஈரச் சிறகுகளில் சொட்டும் நிழல்த் துளிகள் ..

*
துர்க் கனவொன்றின்
விரல் பிடித்துப் பறந்த இரவில்

மரணத்தின் ஈரச் சிறகுகளில்
சொட்டிய
நிழல் துளிகளைப்
பருகித் திமிறுகிறது

இதுவரை
பாடப்படாத
துக்கத்தின் குரல்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக