*
மற்றுமொரு ஏழு என்பதில்
என்னுள் ஒரு வேர் படர்கிறது..
நீயற்ற தன்மையிலிருந்து புறப்படும்
உன்
வேடிக்கை நிழல்களை
இங்கு மனச்சுவற்றில் வரைந்து பார்க்க
நான் அனுமதிக்கிறேன்..
மரணத்தின் ஒத்திகையை நிறைவேற்ற
ஒரு வேட்கை எழுவதில்
நமக்கிடையில் முரண் வெயில் அடிப்பதில்லை..
தென்றல் பொட்டலங்களை அவிழ்த்து கட்டும்
மலர்க் கண்களில் ஊறுகிறது
காமத்தின் உச்சத் தேன்..
அதைப் பருகக் குவியும் உதடுகள் கடந்து
வழுக்கிச் செல்லும் குரல்வளையில் புறப்படுகிறது
மரணத்தின் உச்ச ஸ்தாயி..
ஸ்வரங்களை மீறிப் பறக்க எத்தனிக்கும்
மற்றுமொரு ஏழு என்பதில்..
உனக்குமொரு வேர்..
உன் நிலத்தில்
படரும் தானே..!
****
/ மரணத்தின் ஒத்திகையை நிறைவேற்ற
பதிலளிநீக்குஒரு வேட்கை எழுவதில்
நமக்கிடையில் முரண் வெயில் அடிப்பதில்லை.. /
:)