வெள்ளி, ஜூலை 30, 2010

நினைவு நுனிகளின் காரணிகள்..

*
டைரியின் கிழமைகளில்
எண்களோடு முடிவடைகிறது பொழுதுகள்

ஒரு துக்கத்தையோ
ஒரு பிரியத்தையோ
வசபடுத்திக் கொள்ளும் கோடுகளுக்குள்
ரசவாதம் செய்யும்
நினைவு நுனிகளின் காரணிகளை..

புள்ளிகளிட்டு மட்டும் முடித்துவிடுவதில்லை
வாக்கியங்கள்..

அதொரு ஈடு செய்ய முடியாத குரூரம்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக