வெள்ளி, ஜூலை 30, 2010

மனப் பூனையின் பாதங்களையும் மீறி..

*
மௌனத் தாழ்
என்றதுமே
அடைப்பட்டுவிட்டது
உன்
அத்தனைக் கதவுகளும்..

நீ பொத்திப் பொத்தி..
வளர்த்து வரும்
மனப் பூனையின் பாதங்களையும் மீறி..

உன் நினைவுப் பரணில்..
பெருகும்
என் வார்த்தை எலிகள்..
இனி கோர்க்கத் தொடங்கும்
மணிப் பரல்கள்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக