வெள்ளி, ஜூலை 30, 2010

புரியாத கணக்கு..!

*
வகுப்பின்
கடைசி பெஞ்சில் அமர்ந்து
புரியாத கணக்குக்கு பதில்
தமிழில் கிறுக்கிக் கொண்டிருந்த
ஏதோவுக்கு..

உள்ளங்கையில் பட்டையாய்
ரத்தங்கட்டிக் கொண்ட
வாத்தியாரின் பிரம்பு வரிகளுக்கிடையே..

மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது
எழுத நினைத்த..
அந்த ஏதோ ஒன்று..!

****

1 கருத்து: